திருப்பூரில், பிரபல தனியார் பின்னலாடை நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, தரமற்ற போலி ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். prisma leggins என்ற நிறுவனத்தின் பெயரில் போலி ஆடைகள் விற்கப்படுவதாக, திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, போலி ஆடைகளை தயாரித்த சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்து ரஃபீக் என்பவரை போலீசார் கைது செய்தனர்,