தமிழ்நாடு

TNUSRB தேர்வில் முறைகேடு - SI செய்த பகீர் செயல்

தந்தி டிவி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு, கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேர்வின்போது, காவல் உதவி ஆய்வாளர் சுமன் என்பவரின் மனைவி லாவண்யா என்பவர் தேர்வில் பங்கேற்று எழுதினார். அப்போது, கேள்வித்தாளை செல்போன் மூலம் படம் எடுத்து, வெளியில் அனுப்பி விடையை கேட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் லாவண்யா தேர்வில் காபி அடித்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், காபி அடிக்கப்பட்டது உறுதியானதை அடுத்து, தேர்வு எழுதிய லாவண்யா, அவரது கணவர் காவல் உதவி ஆய்வாளர் சுமன் மற்றும் அவலூர்பேட்டை காவல் நிலைய உதவி பயிற்சி ஆய்வாளர் சிவக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை