தமிழ்நாடு

உணவகம், விடுதிகளில் முறைகேடு கண்டுபிடிப்பு - 23 குடிநீர் இணைப்புகளை துண்டித்த அதிகாரிகள்

திருச்செந்தூரில் தனியார் உணவகம் மற்றும் விடுதிகளில் முறைகேடாக பயன்படுத்தி வந்த குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.

தந்தி டிவி

திருச்செந்தூரில் தனியார் உணவகம் மற்றும் விடுதிகளில் முறைகேடாக பயன்படுத்தி வந்த குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். பொதுமக்களிடம் இருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்த நிலையில், பேரூராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆத்தூரிலிருந்து திருச்செந்தூருக்கு வரும் குடிநீர் குழாயில் இருந்து முறைகேடான முறையில், தனியார் விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு 23 குடிநீர் இணைப்புகள் செல்வதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, அவற்றை உடனடியாக துண்டித்த அதிகாரிகள், விடுதி மற்றும் உணவகங்களின் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர். தற்போது தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இதுபோன்று குடிநீரை திருடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்