தமிழ்நாடு

உணவகம், விடுதிகளில் முறைகேடு கண்டுபிடிப்பு - 23 குடிநீர் இணைப்புகளை துண்டித்த அதிகாரிகள்

திருச்செந்தூரில் தனியார் உணவகம் மற்றும் விடுதிகளில் முறைகேடாக பயன்படுத்தி வந்த குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.

தந்தி டிவி

திருச்செந்தூரில் தனியார் உணவகம் மற்றும் விடுதிகளில் முறைகேடாக பயன்படுத்தி வந்த குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். பொதுமக்களிடம் இருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்த நிலையில், பேரூராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆத்தூரிலிருந்து திருச்செந்தூருக்கு வரும் குடிநீர் குழாயில் இருந்து முறைகேடான முறையில், தனியார் விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு 23 குடிநீர் இணைப்புகள் செல்வதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, அவற்றை உடனடியாக துண்டித்த அதிகாரிகள், விடுதி மற்றும் உணவகங்களின் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர். தற்போது தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இதுபோன்று குடிநீரை திருடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்