தமிழ்நாடு

"மலேசிய மணலுக்கு வரவேற்பு இல்லை" - தரத்தில் சந்தேகம் உள்ளதாக குற்றச்சாட்டு

மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கு வரவேற்பு இல்லாத நிலையில், அதன் தரத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தந்தி டிவி

ஆற்று மணலுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால், மலேசியாவில் இருந்து, எண்ணூர் துறைமுகத்திற்கு, சுமார் 56 ஆயிரத்து 750 மெட்ரிக் டன், மணல் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதன் தரத்தின் மீது சந்தேகம் அடைந்துள்ள பொது மக்கள், விலைக்கு வாங்க முன்வரவில்லை. கடந்த 10 நாட்களில் 4 நபர்கள் மட்டுமே, மணல் கொள்முதல் செய்ய, ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர். இதனால், தமிழக அரசுக்கு சுமார் 548 கோடி ரூபாய் இழப்பு என்று கூறப்படுகிறது. இந்த மணல் கட்டுமான பணிக்கு உகந்தது தானா என்று, ஆய்வு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை