தமிழ்நாடு

கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணி : தென்சென்னையில் குடிநீர் விநியோகம் 2 நாட்கள் நிறுத்தம்

தென்சென்னையில் நாளையும் நாளைமறுநாளும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தென்சென்னையில் நாளையும் நாளைமறுநாளும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை உள்ளது. இங்கு சுத்திகரிக்கப்படும் கடல் நீர், தினசரி தென் சென்னை பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளையும் நாளைமறுநாளும் பராமரிப்பு பணி காரணமாக சுத்திகரிப்பு பணிகள் நிறுத்தப்பட உள்ளன. இதனால் திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச்சேரி, நீலாங்கரை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, தேவையான குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் நெம்மேலி குடிநீர் ஆலை அறிவுறுத்தி உள்ளது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு