விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சௌமியா அன்புமணி சுவாமி தரிசனம் செய்தார். சிறப்பு பூஜையில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவரும், பா.ம.க தலைவர் அன்புமணியின் மனைவியுமான சௌமியா அன்புமணி கலந்து கொண்டார். அவருடன் பாமக நிறுவனர் ராமதாஸின் சகோதரி மகள் விஜயலட்சுமி, கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.