காணும் பொங்கலன்று சுற்றுலா வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் வீசிய குப்பைகள் மாமல்லபுரத்தில் மலைபோல் குவிந்துள்ளது. வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட புரதான சின்னங்கள் அருகே டன் கணக்கில் குப்பைகள் தேங்கியுள்ளதாக நகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். குப்பைகளை அற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவற்றை அகற்ற ஒருநாள் போதாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.