தமிழ்நாடு

மகளிர் சுய உதவிக்குழு...ரூ.30 லட்சம் மோசடி...மொத்தமாக சுருட்டி தப்பியோடிய பெண்

தந்தி டிவி

தூத்துக்குடி அருகே, மகளிர் சுய உதவிக்குழு மூலம் சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் மோசடியில் ஈடுபட்ட பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவில்பட்டி அருகே கூசாலிபட்டி பகுதியில், மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வரும் பார்வதி என்பவர், குழுவில் சேர்ந்த பெண்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. அந்த வகையில்,

சுமார் 21 பேரிடம் 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்த நிலையில், திடீரென அவர் தலைமறைவானதால், பணத்தை செலுத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து பணத்தை மீட்டுத் தரக்கோரி, கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி