தமிழ்நாடு

மகளிர் சுய உதவிக்குழு...ரூ.30 லட்சம் மோசடி...மொத்தமாக சுருட்டி தப்பியோடிய பெண்

தந்தி டிவி

தூத்துக்குடி அருகே, மகளிர் சுய உதவிக்குழு மூலம் சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் மோசடியில் ஈடுபட்ட பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவில்பட்டி அருகே கூசாலிபட்டி பகுதியில், மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வரும் பார்வதி என்பவர், குழுவில் சேர்ந்த பெண்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. அந்த வகையில்,

சுமார் 21 பேரிடம் 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்த நிலையில், திடீரென அவர் தலைமறைவானதால், பணத்தை செலுத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து பணத்தை மீட்டுத் தரக்கோரி, கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி