தமிழ்நாடு

போலி பட்டா மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி - ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க ஒருவர் முயற்சி

போலி பட்டா மூலம் தமது நிலத்தை மோசடி செய்ய முயல்வோரை தடுக்க வேண்டும் என்று கூறி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
போலி பட்டா மூலம் தமது நிலத்தை மோசடி செய்ய முயல்வோரை தடுக்க வேண்டும் என்று கூறி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்துக்கு அலங்காநல்லூரை அடுத்த தாதகோனாம்பட்டியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் தமது மனைவியுடன் வந்தார். அப்போது, தாம் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை திடீரென தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்த போலீசார் உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். அப்போது, தமது நிலத்தை போலிப் பட்டா மூலம் பறிக்க முயல்வதாகவும், எம்.எல்.ஏ.வின் பெயரைக் கூறும் சிலர், அதிகாரிகள் துணையுடன் தம்மை மிரட்டுவதாக புகார் கூறியுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி