தமிழ்நாடு

போலி பட்டா மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி - ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க ஒருவர் முயற்சி

போலி பட்டா மூலம் தமது நிலத்தை மோசடி செய்ய முயல்வோரை தடுக்க வேண்டும் என்று கூறி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
போலி பட்டா மூலம் தமது நிலத்தை மோசடி செய்ய முயல்வோரை தடுக்க வேண்டும் என்று கூறி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்துக்கு அலங்காநல்லூரை அடுத்த தாதகோனாம்பட்டியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் தமது மனைவியுடன் வந்தார். அப்போது, தாம் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை திடீரென தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்த போலீசார் உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். அப்போது, தமது நிலத்தை போலிப் பட்டா மூலம் பறிக்க முயல்வதாகவும், எம்.எல்.ஏ.வின் பெயரைக் கூறும் சிலர், அதிகாரிகள் துணையுடன் தம்மை மிரட்டுவதாக புகார் கூறியுள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்