தமிழ்நாடு

மதுரையில் பற்றி எரிந்த 2 சொகுசு கார்கள்.. பரபரப்பான CCTV காட்சி

தந்தி டிவி

மதுரை ஆனையூர் சங்கீத் நகர் 2வது தெருவைச் சேர்ந்த பாபு, தனது வீட்டு ஷெட்டில் டாட்டா சஃபாரி மற்றும் அருகில் குடியிருப்பவரின் XUV காரையும் நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் மதியம் திடிரென கார்களில் தீ்ப்பற்றியதோடு, கார் ஷெட் முழுவதும் மளமளவென எரிய தொடங்கியது. தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில், வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் தீ விபத்தில் சுமார் 40 லட்சம் மதிப்பலான கார்கள் முழுவதுமாக எரிந்தன. வெயிலின் தாக்கத்தால் கார் தீ பற்றியதா? அல்லது மின் கம்பிகள் உரசியதில் ஏற்பட்ட தீ விபத்தா? என்பது குறித்தும் கூடல் புதூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தீவிபத்து சிசிடிவி காட்சி வெளியாகி பரவி வருகிறது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி