மதுரை மாநகர் அனுப்பானடியில், ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வரும் கல்லூரி மாணவி திவ்யதர்ஷினி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.
பள்ளிப் பருவத்திலிருந்தே ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை காத்துவரும் திவ்யதர்ஷினி, அலங்காநல்லூர் உள்ளிட்ட போட்டிகளில் தனது ‘மிலிட்டரி’ மற்றும் ‘மாணிக்கம்’ காளைகளை வாடிவாசலில் அவிழ்த்து பல வெற்றி வாகைகளை சூடியுள்ளார்.