தமிழ்நாடு

வாகன சோதனையில் தாக்கப்பட்ட இளைஞர்கள் : சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

மதுரையில் போலீசார் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

மதுரையில் போலீசார் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை சிம்மக்கல் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்ற வாலிபர்களை லத்தியால் தாக்கியதில், தங்கவேல் என்பவரது மகன் விவேகானந்தகுமார் சம்பவ இடத்திலேயே மயங்கியுள்ளார். வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு வாலிபருக்கு சிறிது காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேகானந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலிஸாரை கண்டித்தும், உரிய விசாரணை நடத்த கோரியும் இளைஞரின் உறவினர்கள் மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்