தமிழ்நாடு

கோயிலை இடிக்க உத்தரவு.. இளைஞர்கள் எடுத்த முடிவு.. இறங்கிய சாமி.. பதறிய அதிகாரிகள்

தந்தி டிவி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொது மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கோயில் இடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருமங்கலம் அருகே நீர் பிடிப்பு பகுதியில் இருப்பதாக கூறி, மருதூர் அய்யனார் கோயிலை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன்

கோயிலை இடிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்ற போது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இளைஞர்கள் சிலர் கையில் மண்ணெண்ணெய் பாட்டிலுடன்

கோயில் மேல் ஏறி த*கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். பெண்கள் கோயிலுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு வெளியே வர மறுத்தனர். அப்போது சில பெண்கள் சாமி வந்து ஆடினர். அனைவரையும் போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை