தமிழ்நாடு

தாயை தட்டுவண்டியில் சிகிச்சைக்கு அழைத்துவந்த மகன் : மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக புகார்

மதுரையில் தட்டுவண்டியில் தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்த மகனால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த அலாவுதீன் என்பவர் தனது தாயை தட்டுவண்டியில் வைத்து ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார். இந்த பரபரப்பான சம்பவம் குறித்து தெரிவித்த அவர், எதற்கெடுத்தாலும் மருத்துவமனையில் லஞ்சம் கேட்பதாக வேதனை தெரிவித்தார். ஸ்டெச்சர், சக்கர நாற்காலி ஆகியவற்றில் வைத்து தள்ள 500 ரூபாய் வரை ல​ஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டிய அவர், தன்னிடம் பணம் இல்லாததால் தட்டுவண்டியில் தாயை அழைத்து வந்ததாக கூறினார். வட மாநிலங்களில் மட்டுமே நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள், தமிழகத்திலும் அரங்கேறியது அங்கு இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்