தமிழ்நாடு

தாயை தட்டுவண்டியில் சிகிச்சைக்கு அழைத்துவந்த மகன் : மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக புகார்

மதுரையில் தட்டுவண்டியில் தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்த மகனால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த அலாவுதீன் என்பவர் தனது தாயை தட்டுவண்டியில் வைத்து ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார். இந்த பரபரப்பான சம்பவம் குறித்து தெரிவித்த அவர், எதற்கெடுத்தாலும் மருத்துவமனையில் லஞ்சம் கேட்பதாக வேதனை தெரிவித்தார். ஸ்டெச்சர், சக்கர நாற்காலி ஆகியவற்றில் வைத்து தள்ள 500 ரூபாய் வரை ல​ஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டிய அவர், தன்னிடம் பணம் இல்லாததால் தட்டுவண்டியில் தாயை அழைத்து வந்ததாக கூறினார். வட மாநிலங்களில் மட்டுமே நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள், தமிழகத்திலும் அரங்கேறியது அங்கு இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை