தமிழ்நாடு

போலீஸ் உடையில் வாகனங்களை வழிமறித்து வசூல் : திருமங்கலம் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் போலீஸ் உடை அணிந்து வாகனங்களை மறித்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
மதுரை மாவட்டம் திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் போலீஸ் உடை அணிந்து வாகனங்களை மறித்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். திருமங்கலம் நகர சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் சுரேஷ் உசிலம்பட்டி சாலை சந்திப்பில் ரோந்து சென்ற போது, போலீஸ் உடை அணிந்த ஒருவர் வாகனங்களை வழிமறித்து பணம் பெறுவதை கண்டார். இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போது, எர்மலம்பட்டியை சேர்ந்த ராமன் என்பதும், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் போலீஸ் உடை அணிந்து பணம் பறிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ