தமிழ்நாடு

போலீஸ் உடையில் வாகனங்களை வழிமறித்து வசூல் : திருமங்கலம் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைது

மதுரை மாவட்டம் திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் போலீஸ் உடை அணிந்து வாகனங்களை மறித்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
மதுரை மாவட்டம் திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் போலீஸ் உடை அணிந்து வாகனங்களை மறித்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். திருமங்கலம் நகர சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் சுரேஷ் உசிலம்பட்டி சாலை சந்திப்பில் ரோந்து சென்ற போது, போலீஸ் உடை அணிந்த ஒருவர் வாகனங்களை வழிமறித்து பணம் பெறுவதை கண்டார். இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போது, எர்மலம்பட்டியை சேர்ந்த ராமன் என்பதும், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் போலீஸ் உடை அணிந்து பணம் பறிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்