மதுரை ஒத்தக்கடையில், வாக்குச்சாவடி அலுவலரை சுயேட்சை மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க, தி.மு.க வேட்பாளர்கள், மற்றும் ஆதரவாளர்கள் வாக்குச்சாவடிக்குள் தங்களுக்கு ஆதரவு திரட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டினார். இதனால் வாக்குச்சாவடி மையத்தில் சிறிது நேரம் பரபரப்புடனும், பதற்றத்துடனும் காணப்பட்டது.