தமிழ்நாடு

ரூ.1 கோடி மதிப்பிலான பழைய ரூ.500, 1000 நோட்டுகள் பறிமுதல் பறிமுதல் : 4 பேர் கைது

மதுரையில் ஒரு கோடி மதிப்பிலான பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தந்தி டிவி

இது தொடர்பாக மேலூரை சேர்ந்த சரவணன், பரமக்குடியை சேர்ந்த நவீன் சக்தி, ராஜசேகர், தர்மா ஆகிய 4 பேரிடம் சுமார் 9 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

அதில், சரவணன் என்பவர் மேலூரில் வெளிநாட்டு பணத்தை மாற்றும் நிறுவனம் நடத்தி வருவதும், அங்கிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டுசெல்லப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, 1 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய அதிகாரிகள், காரை பறிமுதல் செய்ததுடன் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’