மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை வசூலாக 88 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஒரு மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் வங்கி பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியலில் சுமார் 88 லட்சத்து 26 ஆயிரத்து 113 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. இதில் 557 கிராம் தங்கம், 945 கிராம் வெள்ளி மற்றும் 484 வெளிநாட்டு கரன்சி நோட்டுக்களும் கிடைக்கப்பெற்றன.