ஊரடங்கு காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற இருந்த சித்திரை திருவிழாவும், தேரோட்டமும் நடைபெறாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் தினந்தோறும் நடைபெறும் என்றும், மே 4ம் தேதியன்று காலை 9 .05 மணி முதல் 9.29 மணிக்குள், நான்கு சிவாச்சாரியர்கள் மட்டும் உரிய பாதுகாப்புடன் திருக்கல்யாண சம்பிரதாயங்களை நடத்துவார்கள் என்றும் இந்த நிகழ்வினை கோவில் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில், புதிய திருமாங்கல்யம் அணிய விரும்பும் பெண்கள், குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிலிருந்தே பிரார்தித்துக்கொள்ளலாம் என கோவில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.