தமிழ்நாடு

திருமண நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட 5 யானைகள் : உரிய அனுமதி இன்றி அழைத்து வரப்பட்டதாக புகார்

மதுரையில் திருமண நிகழ்ச்சிக்காக உரிய அனுமதி இன்றி 5 யானைகளை அழைத்து வந்ததாக அவற்றின் உரிமையாளர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

தந்தி டிவி
மதுரையில் திருமண நிகழ்ச்சிக்காக உரிய அனுமதி இன்றி 5 யானைகளை அழைத்து வந்ததாக அவற்றின் உரிமையாளர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்ற திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்பதற்காக யானைகள் அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டன. அது குறித்த வீடியோ ஆதாரத்துடன் வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட யானை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அது குறித்த அறிக்கை விரைவில் சென்னையில் உள்ள வனத்துறை தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ