தமிழ்நாடு

திருமண நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட 5 யானைகள் : உரிய அனுமதி இன்றி அழைத்து வரப்பட்டதாக புகார்

மதுரையில் திருமண நிகழ்ச்சிக்காக உரிய அனுமதி இன்றி 5 யானைகளை அழைத்து வந்ததாக அவற்றின் உரிமையாளர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

தந்தி டிவி
மதுரையில் திருமண நிகழ்ச்சிக்காக உரிய அனுமதி இன்றி 5 யானைகளை அழைத்து வந்ததாக அவற்றின் உரிமையாளர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்ற திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்பதற்காக யானைகள் அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டன. அது குறித்த வீடியோ ஆதாரத்துடன் வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட யானை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அது குறித்த அறிக்கை விரைவில் சென்னையில் உள்ள வனத்துறை தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி