தமிழ்நாடு

முழு ஊரடங்கு - கண்காணிப்பு வளையத்தில் மதுரை

மதுரையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் காலை 6 மணி முதல் நண்பகல் 2 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டீக்கடைகளை திறக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹோட்டல்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்கள் மட்டும் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் ஆகிய 3 முக்கிய பேருந்து நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மாவட்ட எல்லைகளை கண்காணிக்க ஏற்கனவே 6 சோதனை சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 8 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 266 டாஸ்மாக் கடைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் பகுதிகளில் உள்ள 150 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 116 கடைகள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்