தமிழ்நாடு

மதுரை காமராஜர் பல்கலை. விவகாரம்; சிண்டிகேட் உறுப்பினர்கள் செயல்பட தடை - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர்களாக உள்ள 3 பேராசிரியர்கள் செயல்பட உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

தந்தி டிவி

மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர்களாக உள்ள 3 பேராசிரியர்கள் செயல்பட உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

மதுரையை சேர்ந்த லியோனல் அந்தோணி ராஜ் உயர்நீதி மன்ற மதுரை கிளை மனு தாக்கல் செய்தார். அதில்

மதுரை காமராஜர் பல்கலை கழக துணை வேந்தராக செல்லத்துரை இருந்த காலத்தில் இணைப் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும், இதில் பலர் தகுதி அற்றவர் என்றும் குறிப்பிட பட்டுள்ளது.ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி விசாரணை செய்து, முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்தது என்றும், ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, உத்தரவு பிறப்பித்த பின்னரும் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என கேள்வி எழுப்பினர். மேலும் காமராஜர் பல்கலை கழக சிண்டிகேட் உறுப்பினர்களாக உள்ள பேராசிரியர்கள் சுதா, தங்கராஜ், நாகரத்தினம் ஆகிய மூவரும் செயல்பட தடை விதித்த நீதிபதிகள், வழக்கை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்