இதனிடையே, மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல்நிலையத்தில், மீட்கப்பட்ட சிலைகள் குறித்து ஐஜி பொன்.மாணிக்கவேல் மற்றும் தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன்
ஆகியோர் விசாரணை நடத்தினர். கோயில் நிர்வாகி மற்றும் ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் மீட்கப்பட்ட சிலைகள் குருவித்துறை பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிலை கடத்தல்காரர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.