தமிழ்நாடு

புத்தூர் வணிக வளாக டெண்டர் விவகாரம்: வெளிப்படையான டெண்டர் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி

திருச்சி புத்தூர் பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வணிக வளாகம் கட்டுவதற்கான டெண்டரை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

தந்தி டிவி
திருச்சி புத்தூர் பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வணிக வளாகம் கட்டுவதற்கான டெண்டரை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை, தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதுதொடர்பாக, திருச்சியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தொடர்ந்த பொதுநல மனுவில், உறையூரில் கட்டிடப்பணிகள் நிறைவடையும் வரை, புத்தூர் மீன் சந்தையிலிருந்து வியாபாரிகளை வெளியேற்ற தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்