தமிழ்நாடு

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை? - அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

தமிழகத்தில், இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை என, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தந்தி டிவி
தமிழகத்தில், இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை என, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மணப்பாறை வழக்கறிஞர் சங்க செயலர் செல்வராஜ் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் மதுவுக்கு அடிமையானவர்கள் தமிழகத்தில் அதிகம் என்பதால், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரை எதிர்மனுதாரராக சேர்ப்பதாக உத்தரவிட்டனர். மேலும், அடுத்தகட்டமாக எத்தனை டாஸ்மாக் கடைகள், எப்போது மூடப்படவுள்ளன? என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்