தமிழ்நாடு

"7.5 % உள் ஒதுக்கீடு - நடப்பு ஆண்டே நிறைவேற்ற வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நடப்பு ஆண்டிலேயே சட்ட மசோதாவை நிறைவேற்றி 400 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நடப்பு ஆண்டிலேயே சட்ட மசோதாவை நிறைவேற்றி 400 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. சட்ட மசோதா நடப்பு ஆண்டிலேயே நிறைவேறாவிட்டால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 8 மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புகளில் சேர வாய்ப்புள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆளுநர் நீதிமன்றத்திற்கு பதில் கூற வேண்டிய அவசியமில்லை என்றாலும், பொறுப்புள்ள அதிகாரிகள் சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் விதிகள் வகுக்கப்படுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். வரும் திங்கட்கிழமை இந்த விவகாரத்தில் நல்ல முடிவு தெரியும் என நம்புவதாகவும், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை