தமிழ்நாடு

மணல் கொள்ளை - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி...

சட்ட விரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

இதுதொடர்பாக கண்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர், அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு அரசு இயந்திரம் துணை போயுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோத மணல் கொள்ளையர்கள் மீது மட்டும் இல்லாமல், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தனர். அதன்படி எத்தனை அதிகாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து அடுத்த விசாரணையின் போது தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மணல் கொள்ளை தொடர்பாக என்னென்ன பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. என்றும் கடந்த 10 ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை எவ்வளவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு