பிரபல நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மதுரையில் அர்ஜுன் சிங் என்ற விற்பனை முகவரிடம்17 லட்சம் ரூபாய் நூதன மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மொத்த வியாபாரத்திற்கான அங்கீகார சான்றிதழ் வழங்குவதாக பொய் சொல்லி மர்ம நபர் வங்கி கணக்கு மூலம் அர்ஜுன் சிங்கிடமிருந்து பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அர்ஜூன்சிங் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.