தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் விவசாயிக்கு மத்திய அரசின் விருது : உளுந்து உற்பத்தியில் விவசாயி சாதனை

உளுந்து உற்பத்தியில் சாதனை புரிந்த திருச்சியை சேர்ந்த விவசாயி ஒருவர் மத்திய அரசின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி சிறுகமணி எஸ். புதுக்கோட்டையை சேர்ந்தவர் சரவணன். தாவரவியல் பட்டதாரியான இவர், விவசாயம் செய்து வருகிறார். சாகுபடியில் பல்வேறு புதிய யுக்திகளை பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்ட சரவணன், தனது வயலில் வம்பன் 8 என்ற உளுந்து ரகத்தை பயிரிட்டார். நவீன தொழில்நுட்பங்கள் மூலம் விதைப்பு, உரமிடல், களையெடுப்பு உள்ளிட்ட பணிகளை செய்த அவருக்கு 835 கிலோ உளுந்து கிடைத்தது. இரு மடங்கு உற்பத்தி செய்து சாதனை படைத்த சரவணன், மத்திய அரசின் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் ஜனவரி 6ஆம் தேதி பெங்களூருவில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி கையால் அவர் விருது பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்