தமிழகத்தில் சுமார் 14 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.துணைவேந்தர் பதவிகளை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது