தமிழ்நாடு

நாளை முதல் போராட்டம்...வழக்கறிஞர் கூட்டமைப்பினர் அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி

இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை முதல் 19-ம் தேதி வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட போவதாக, வழக்கறிஞர் ஜாக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளர்.

தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு ஜாக் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார், மாவட்ட விசாரணை நீதிமன்றங்களில் இ- பைலிங் முறையை ஏப்ரல் 1 தேதி முதல் நீதித்துறை அமல்படுத்தி உள்ளதாக கூறினார். ஆனால் இ ஃபைலிங் செய்வதற்கு கீழமை விசாரணை நீதிமன்றங்களில் எந்த கட்டமைப்பு வசதியும் செய்து தரவில்லை என்றும், இதனால் வழக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக கூறினார். இந்த சிக்கல் தீரும் வரை இ ஃபைலிங் முறையை நிறுத்தி வைக்ககோரி, நாளை முதல் 19-ம் தேதி வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை