தமிழ்நாடு

குடிபோதையில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி : தண்ணீரை ஊற்றி காப்பாற்றிய போலீசார்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முருகன் என்பவர் தீக்குளிக்க முயன்றார்.

தந்தி டிவி

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முருகன் என்பவர் தீக்குளிக்க முயன்றார். ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த அவர் குடிபோதையில் மண்ணெண்ணையை உடம்பில் ஊற்றி கொண்டார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முருகனை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் முருகனை விசாரணைக்கு அழைத்து சென்றனர். வங்கியில் கடன் கேட்டு தராததால் முருகன் தீக்குளிக்க முயன்றதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துளளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி