சித்திரை தேரோட்டம் - குப்பைகளை விரைந்து அகற்றிய தூய்மை பணியாளர்கள்
மதுரை சித்திரை தேரோட்டத்தின் போது மாசி வீதிகளில் குவிந்த குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மாசி வீதிகளில் குளிர்பான பாட்டில்கள், குடிநீர் பாட்டில்கள் என ஏராளமான குப்பைகள் குவிந்த நிலையில் அவற்றை உடனடியாக அகற்றும் பணியில் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.