Madurai || மதுரையில் ஆவின் பாலில் துர்நாற்றம் - பாலி ஃபிலிம் காரணம் என விளக்கம் மதுரை மாவட்டத்தில் விநியோகிக்கப்பட்ட ஆவின் டிலைட் பால் பாக்கெட்டுகளில் துர்நாற்றம் வீசியதாக எழுந்த புகார் குறித்து, மதுரை ஆவின் பொதுமேலாளர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ள மதுரை ஆவின் பொதுமேலாளர், பால் பாக்கெட்டுகளை அடைக்கப் பயன்படுத்தப்பட்ட பாலி ஃபிலிமிலிருந்தே இந்த துர்நாற்றம் உருவானது ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பாலித்தீன் ஃபிலிம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், பாலித்தீன் ஃபிலிமை விநியோகித்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது..