தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : ​சிறந்த காளையாக புதுக்கோட்டை காவல் ஆய்வாளரின் காளை தேர்வு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவினர் நடத்தினர்.

தந்தி டிவி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவினர் நடத்தினர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராக்கள் மூலமாக போட்டி கண்காணிக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றுகளாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளில், வீரர்களிடம் பிடிபடாமல் போக்கு காட்டிய காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, புதுக்கோட்டையை சேர்ந்த காவல் ஆய்வாளர் அனுராதா என்பவருக்கு சொந்தமான புருஷோத்தமன் என்ற காளை முதல் பரிசை பெற்றது. அதன் உரிமையாளருக்கு இருசக்கர வாகனம் பரிசாக அளிக்கப்பட்டது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு