தமிழ்நாடு

அடகுகடையில் 1,500 சவரன் நகை கொள்ளை : கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு

மதுரை மாவட்டம் நரிமேட்டில் கட்டபொம்மன் தெருவில் கோபிநாத் என்பவர் அடகு கடை நடத்திவருகிறார்.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் நரிமேட்டில் கட்டபொம்மன் தெருவில் கோபிநாத் என்பவர் அடகு கடை நடத்திவருகிறார். நேற்று இரவு கடையை அடைத்துவிட்டு வந்த கோபிநாத், இன்று மதியம் கடையை திறக்க சென்றுள்ளார். கடையில் இருந்த ஆயிரத்து 483 சவரன் நகை மற்றும் 9 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோபிநாத், நரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளையும் ஆய்ந்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை