தமிழ்நாடு

அடகுகடையில் 1,500 சவரன் நகை கொள்ளை : கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு

மதுரை மாவட்டம் நரிமேட்டில் கட்டபொம்மன் தெருவில் கோபிநாத் என்பவர் அடகு கடை நடத்திவருகிறார்.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் நரிமேட்டில் கட்டபொம்மன் தெருவில் கோபிநாத் என்பவர் அடகு கடை நடத்திவருகிறார். நேற்று இரவு கடையை அடைத்துவிட்டு வந்த கோபிநாத், இன்று மதியம் கடையை திறக்க சென்றுள்ளார். கடையில் இருந்த ஆயிரத்து 483 சவரன் நகை மற்றும் 9 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோபிநாத், நரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளையும் ஆய்ந்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்