மாதம்பட்டி ரங்கராஜுடன் ஜாய் கிரிசில்டா - வெளியான புகைப்படம் நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா மீண்டும் இணைந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. குழந்தையை வாழ் நாள் முழுவதும் பார்த்துக்கொள்வதாக ரங்கராஜ் ஒத்துக்கொண்ட நிலையில், இருவரும் மீண்டும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை ஜாய் கிரிஸில்டா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.. மத்தியஸ்தரிடம் இரண்டு குடும்பத்தையும் பார்த்து கொள்வதாக மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்ததாக ஜாய் கிரிசில்டா தகவல் தெரிவித்துள்ளார்..