தமிழ்நாடு

சந்திர கிரகணம் நிறைவு - நதிகளில் புனித நீராடிய பக்தர்கள்

தந்தி டிவி

சந்திர கிரகணம் நிறைவடைந்ததை ஒட்டி வடமாநிலங்களில் உள்ள நதிகளில் பக்தர்கள் புனித நீராடினர்..

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரயு நதியில் புனித நீராடி வழிபட்டனர். இதன் மூலம் பாவ தோஷங்கள் நீங்கி, நன்மை கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

வாரணாசியில் கங்கை நதியில் புனித நீராடிய பக்தர்கள், கையில் தீபம் ஏந்தி வழிபட்டனர். இதனால், கிரகணத்தின் பாதிப்பு நீங்கிய பிறகு நற்பலன்கள் கிடைக்கும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் திரண்ட திரளான பக்தர்கள், கங்கையில் புனித நீராடினர்.. பின்னர் கங்கை அன்னைக்கு ஆரத்தி எடுத்தும், நதியில் தீபத்தை மிதக்க விட்டும் பிரார்த்தனை செய்தனர்.

சந்திர கிரகணம் நிறைவடைந்ததை ஒட்டி, மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் அமைந்துள்ள மகாகாலேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்