தமிழ்நாடு

காதலிக்கு நாளை திருமணம் - காதலன் கழுத்தறுத்து கொடூர கொலை

தந்தி டிவி

விளாத்திகுளம் அருகே காதலிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் - சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்ற இளைஞரும், அப்பகுதியை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் காதல் விவகாரம் தெரிந்த நிலையில், பெண் வீட்டார் வேறொரு இடத்தில் திருமண ஏற்பாடுகள் செய்ததாகவும், நாளை திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கோவையில் பணிபுரிந்து வந்த மாரியப்பன், விளாத்திகுளம் அருகே கழுத்து மற்றும் மார்பு பகுதியில் காயங்களுடன் மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார், மாரியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காதலியின் குடும்பத்தினர்தான் இளைஞர் கொலை செய்யப்பட காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்