தமிழ்நாடு

ஒரே நாளில் 62,559 வழக்குகளுக்கு தீர்வு

தந்தி டிவி

தமிழகத்தில் இன்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 62 ஆயிரத்து 559 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகத்தில் நேற்று தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் 8 அமர்வுகளும், மதுரை கிளையில் 4 அமர்வுகளும், கீழமை நீதிமன்றங்களில் 482 அமர்வுகளிலும் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில், 49 ஆயிரத்து 890 நிலுவை வழக்குகள், 12 ஆயிரத்து 669 நீதிமன்ற விசாரணைக்கு வராத வழக்குகள் என மொத்தம், 505 கோடியே 78 லட்சத்து 18 ஆயிரத்து 659 ரூபாய் மதிப்பிலான, 62 ஆயிரத்து 559 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு