தமிழ்நாடு

ஒரே நாளில் 62,559 வழக்குகளுக்கு தீர்வு

தந்தி டிவி

தமிழகத்தில் இன்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 62 ஆயிரத்து 559 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகத்தில் நேற்று தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் 8 அமர்வுகளும், மதுரை கிளையில் 4 அமர்வுகளும், கீழமை நீதிமன்றங்களில் 482 அமர்வுகளிலும் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில், 49 ஆயிரத்து 890 நிலுவை வழக்குகள், 12 ஆயிரத்து 669 நீதிமன்ற விசாரணைக்கு வராத வழக்குகள் என மொத்தம், 505 கோடியே 78 லட்சத்து 18 ஆயிரத்து 659 ரூபாய் மதிப்பிலான, 62 ஆயிரத்து 559 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்