தமிழ்நாடு

ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா? - காணொலியில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

தந்தி டிவி

வருகிற 31ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்தந்த மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறு அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு, முதலமைச்சர் வழங்கி வருகிறார். மேலும், ஊரடங்கு தளர்வு தொடர்பாகவும், பொதுப் போக்குவரத்து தடையை நீக்குவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே