தமிழ்நாடு

"ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும்" - தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் உத்தரவு வெளியாகும் வரை, ஊரடங்கு தொடர்பாக தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என முடிவெடுத்து அறிவிக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளதாகவும், அந்த குழு தனது முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, தனது ஆலோசனைகளை முதலமைச்சரிடம் நாளை

தெரிவிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த ஆலோசனைகளை ஆராய்ந்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும், இது குறித்து, தமிழக அரசின் உத்தரவு வெளியாகும் வரை, தற்போதைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை