தமிழ்நாடு

"ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும்" - தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் உத்தரவு வெளியாகும் வரை, ஊரடங்கு தொடர்பாக தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என முடிவெடுத்து அறிவிக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளதாகவும், அந்த குழு தனது முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, தனது ஆலோசனைகளை முதலமைச்சரிடம் நாளை

தெரிவிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த ஆலோசனைகளை ஆராய்ந்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும், இது குறித்து, தமிழக அரசின் உத்தரவு வெளியாகும் வரை, தற்போதைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?