உள்ளாட்சி தேர்தலின்போது, ஊரக பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தி கொள்ள அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆளுநர் ஒப்புதலுடன் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சியில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.