தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 4 வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. ஜெயசுக்கின் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி மதன் பி.லோகூர் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.