தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்- 2ஆம் கட்ட வாக்குப்பதிவு - ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காக 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் ஆயிரத்து 551 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு 93 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படுகிறது.

158 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தம் 1 கோடியே 28 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனர்.

போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள் என 61 ஆயிரத்து 4 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு வீடியோவாக பதிவு செய்வதுடன், வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஜனவரி 2ஆம் தேதி வெளியாக உள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி