தமிழ்நாடு

"நீங்க தண்ணி, தம் அடிக்குறதுக்கு நாங்க சம்பாரிச்சு குடுக்கணுமா''

தந்தி டிவி

கடன் தவணை - நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

திருவாரூர் அருகே விளமல் பகுதியில், நுண் கடன் நிதி நிறுவன கிளை அலுவலகத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். ராமானுஜ மணலி பகுதியைச் சேர்ந்த 15 பெண்கள், இந்த நிதி நிறுவனத்தில் கடன் பெற்று தவணை முறையில் கடன் தொகையை செலுத்தி வந்துள்ளனர். கடந்த 9 மாதங்களாக தவணைத்தொகையை செலுத்திய நிலையில் முறையாக வரவு வைக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக துணை மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள், நிறுவனம் தரப்பில் முறையாக பதில் சொல்லவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

இதனிடையே, பணத்தை தாங்கள் கையாடல் செய்யவில்லை என்றும், கலெக்‌ஷன் ஏஜெண்ட் தான் கையாடல் செய்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மேலாளர் தொலைபேசி மூலம் பெண்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை