Loan | Audio Leak | ``லாட்ஜுக்கு வர்ரியா?’’ டியூ கட்ட லேட் ஆனதால் பெண்ணிடம் ஆபாசம்
மதுரை வாடிப்பட்டி அருகே, தனியார் நிதி நிறுவனத்தில் கடன்பெற்று தவணைத்தொகை செலுத்தாத பெண்களிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய அந்நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
வாடிப்பட்டியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றிருந்தார். கடந்த மாதம் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் இருந்ததால் தவணைத்தொகை செலுத்தாத நிலையில், அடுத்த மாதம் சேர்த்து கட்டிவிடுவதாக கூறியிருந்தார். இந்நிலையில், அப்பெண்ணை தொடர்பு கொண்ட நிதி நிறுவன ஊழியர் ஒருவர், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது.