தமிழ்நாடு

நிலத்தகராறில் இருதரப்பினர் இடையே மோதல் – இருவருக்கு அரிவாள் வெட்டு

நிலத்தகராறில் இருதரப்பினர் இடையே மோதல் – இருவருக்கு அரிவாள் வெட்டு

thanthitv

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே, நிலத்தகராறு தொடர்பான முன்விரோதத்தில் இருவர் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

ராஜகோபாலபேரி வடக்குத் தெருவைச் சேர்ந்த இரு குடும்பத்தினரிடையே நிலத்தகராறு காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், இருதரப்பினரும் அரிவாளால் தாக்கிக் கொண்டுள்ளனர்.

இதில் நடராஜன் என்பவருக்கு தலையில் பலத்த காயமும், பரமசிவன் என்பவருக்கு கை, கால்களில் காயமும் ஏற்பட்டது.

இருவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இருதரப்பினரும் அரிவாளால் தாக்கிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

EPS | AIADMK | SPV | "முடியாது.." EPSக்கு பெரும் ஷாக் கொடுத்த SPV, நத்தம் விஸ்வநாதன்

Kulasai | Rocket Launch Pad | தனியார் வசம் செல்கிறதா குலசை ராக்கெட் ஏவுதளம்?

வாயை பொத்தி புதருக்குள் தூக்கி சென்று கொடூரம் - 4th மாணவிக்கு நேர்ந்த வெளியே சொல்ல முடியாத கொடுமை

Chennai Corporation | சென்னையில் 3.49 லட்சம் பேருக்கு நோட்டீஸ் - பெரும் குழப்பத்தில் பொதுமக்கள்

TN Police | Independence Day | டோட்டலாக கண்ட்ரோல் எடுக்கும் போலீஸ்..சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு