தமிழ்நாடு

சுதந்திர தினத்தன்று பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் - காமராஜர் சிலையிடம் மனு அளித்த குமரி ஆனந்தன்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள காமராஜர் சிலையிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் மனு அளித்தார்.

தந்தி டிவி
சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் பழனிச்சாமி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று விருதுநகரில், காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள காமராஜர் சிலையிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் மனு அளித்தார். காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய குமரி ஆனந்தன், அவரது சிலையிடம் இந்த மனுவை அளித்தார். மேலும், மனுவில் அண்ணா பிறந்த நாளன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 36 மசோதாக்களை கொண்டு வந்த பிரதமர் மோடி, 37வது மசோதாவாக பூரண மது ஒழிப்பை கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை