தமிழ்நாடு

சுதந்திர தினத்தன்று பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் - காமராஜர் சிலையிடம் மனு அளித்த குமரி ஆனந்தன்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள காமராஜர் சிலையிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் மனு அளித்தார்.

தந்தி டிவி
சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் பழனிச்சாமி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று விருதுநகரில், காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள காமராஜர் சிலையிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் மனு அளித்தார். காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய குமரி ஆனந்தன், அவரது சிலையிடம் இந்த மனுவை அளித்தார். மேலும், மனுவில் அண்ணா பிறந்த நாளன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 36 மசோதாக்களை கொண்டு வந்த பிரதமர் மோடி, 37வது மசோதாவாக பூரண மது ஒழிப்பை கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி