தமிழ்நாடு

சுதந்திர தினத்தன்று பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் - காமராஜர் சிலையிடம் மனு அளித்த குமரி ஆனந்தன்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள காமராஜர் சிலையிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் மனு அளித்தார்.

தந்தி டிவி
சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் பழனிச்சாமி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று விருதுநகரில், காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள காமராஜர் சிலையிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் மனு அளித்தார். காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய குமரி ஆனந்தன், அவரது சிலையிடம் இந்த மனுவை அளித்தார். மேலும், மனுவில் அண்ணா பிறந்த நாளன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 36 மசோதாக்களை கொண்டு வந்த பிரதமர் மோடி, 37வது மசோதாவாக பூரண மது ஒழிப்பை கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்