தமிழ்நாடு

15 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்முறை... அயனாவரம் சம்பவம் போல சென்னையில் மீண்டும் பயங்கரம்

கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிக்கு மது வாங்கிக் கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சென்னை அயனாவரத்தில் பள்ளி சிறுமி ஒவரை 13 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்முறை செய்த சம்பவத்தில் இருந்து மீள்வதற்குள் புளியந்தோப்பில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 15 வயதான அந்த சிறுமி வீட்டில் தன் பாட்டியுடன் கோபித்துக் கொண்டு கடந்த 3ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெபினா என்ற பெண்ணிடம் அடைக்கலம் புகுந்துள்ளார். முசினா பேகம் என்ற பெண்ணுடன் சேர்ந்து கொண்ட ஜெபினா சிறுமியை புரசைவாக்கத்தில் உள்ள நிஷா என்ற பெண்ணிடம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மது வாங்கிக் கொடுத்து அந்த போதையில் வைத்தே அந்த கும்பல் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. மயக்க நிலையில் இருந்த சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து 4 நாட்களாக வன்கொடுமை செய்துள்ளது. இதனிடையே சிறுமியை காணவில்லை என கூறி அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் உடலில் காயங்களுடன் கடந்த 7ஆம் தேதி சிறுமி வீட்டுக்கு வந்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாயிடம் சிறுமி கூறியதை தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் 3 பெண்களை கைது செய்த போலீசார் பாலியல் வன்கொடுமை செய்த 5 பேரை தேடி வருகின்றனர். மேலும் சிறுமியிடம் குழந்தைகள் நல குழும அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TVK Complaint``ஆ.ராசா மேல் சட்டப்படி நடவடிக்கை’’ - போலீஸுக்கு சென்றது.. ஷாக் கொடுத்த தவெக தரப்பு

NTK Candidates இடைத்தேர்தல் வேட்பாளர்களை களமிறக்கினார் சீமான் - யார் யார் தெரியுமா..?

BREAKING || வெற்றிகரமாக முடிந்த பிரிக்ஸ் மாநாடு - உலகை புருவம் உயர்த்த வைத்த `டெல்லி பிரகடனம்’

Vinayagarchaturthi | சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு `க்ரீன் சிக்னல்'..வெளியான அதிரடி அறிவிப்புகள்

CPI |CPM | Byelection |இடைத்தேர்தலில் என்ட்ரி கொடுக்கும் புதிய கூட்டணி..இது யாருமே யோசிக்காத ஆங்கிள்